Header Ads



அரபு கல்லூரியிலிருந்து தப்பிச் சென்ற 5 சிறுவர்கள் பொலிஸாரால் கைது

புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள அரபு  கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வந்த ஐந்து சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று புத்தளம் புகையிரத நிலையத்தில் நின்றிருந்த போது புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் புகையிரத நிலையத்திலிருந்து புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இச்சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15, 13 மற்றும் 10 வயதுகளுடைய இச்சிறுவர்கள் ஐந்து பேரும் கொழும்பு மற்றும்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.  இவர்கள் குறித்த அரபிக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து நேற்று முன்தினம் காலை தப்பி வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வந்த சிறுவர்கள் புத்தளம் புகையிரத நிலையத்தில் நின்றிருந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இச்சிறுவர்கள் தொடர்பில் புகையிரத நிலையத்திலிருந்து வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற புத்தளம் பொலிஸார் அச்சிறுவர்களைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அச்சிறுவர்களை வண்ணாத்திவில்லு பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

வண்ணாத்திவில்லு பொலிஸார் இச்சிறுவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

1 comment:

  1. குறித்த சிறுவர்கள் தமது விருப்பத்திற்கு மாறாக அரபுக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

    அரபுக் கல்லூரியில் நடைபெறும் விடயங்களை பார்க்கும் பொழுது அவை சிறுவர்களுக்கு உகந்தவை அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.