சுதந்திர கட்சி வெற்றிபெற, பிரதமர் கனவிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும்
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வெற்றி பெற வேண்டுமாயின், பிரதமர் கனவிலிருந்து அனைவரும் விடுபட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் பொது தேர்தல் பிற்போடக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு எதிர்கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் முறைமை சீர்த்திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் சில குறைக்கப்படுதல் போன்ற விடயங்கள், ஒரே நேரத்தில் இடம் பெற வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யோசனை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்காக தமது தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால், மத்திய செயற்குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதை இவர் யாருக்கு கூறுகின்றார் என்பது புரிகின்றதா..?
ReplyDeleteஇதை யாருக்கு கூறுகின்றாரோ அவருடைய வாலாகத்தான் கடந்த காலத்தில் இவர் இருந்து வந்தார்.
எதிரியைக்கூட நம்பலாம். ஆனால் சந்தர்ப்பவாதிகளை....?