சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளான பெண் நாடு திரும்பினார் (படங்கள்)
சவூதி அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற பெண்ணொருவர் சித்திரவதைக்குட்பட்டு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக உறவினர்களினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வீசி வீதி கோர கல்லி மடு கிரானைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான தங்கராசா ஞானம்மா (வயது 41) என்பவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2012.12.19 ஆம் திகதியன்று சவூதி அரேபிய நாட்டிற்கு சென்றதாகவும் தாம் 8 நாட்கள் முதலாவது வீடொன்றில் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்ததாகவும் அவ்வீடு பிடிக்காத காரணத்தினால் 2ஆவது வீடொன்றுக்கு சென்று தொழில் புரிந்து வந்ததாகவும் மேற்படி சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான பெண் தெரிவித்தார்.
இங்கு வீட்டு எஜமானுக்கு 2 மனைவிகளும் மற்றும் 20 பிள்ளைகளுமுள்ளனர். 3 மாடிக்கட்டட த்திலேயே வீடு அமைந்திருந்தது. இங்கு தான் மட்டுமே பணியாற்ற வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். சம்பளம் மற்றும் உடு துணிகள் தருவதில்லை. எனது பிள்ளைகளுடன் கூட தொலை பேசியில் பேசமுடியாத நிலைமை அங்கு காணப்பட்டது.சம்பளம் கேட்டால் வீட்டு எஜமானன் மற்றும் எஜமானி ஆகியோர் அடித்து துன்புறுத்துவார்கள்.
இவ்வாறு இருக்கையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு எஜமானனிடம் சம்பளம் கேட்ட போது அவர் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார். நான் அவரது சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்கவே கம்பு ஒன்றினால் காலிலும் கை மற்றும் உடலில் ஓங்கி அடித்து என்னை கீழே தள்ளிவிட்டார்.
இதனால் எனது காலில் முறிவு ஏற்பட்டது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் இல்லை. உணவு கூடத்தரவும் இல்லை. 3 நாட்கள் கழிந்த பின்பு நானே வீட்டுக்காரர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.
அவ்வேளை என்னை சவூதி அரேபிய பொலிஸார் விசாரணை செய்து உணவும் தந்து வைத்தியசாலையில் சேர்த்தனர்.கடந்த 3 மாதங்களாக சவூதி வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வந்தேன். பின்னர் பொலிஸாருக்கு பயந்த எஜமான் என்னை இலங்கைக்கு செல்லுமாறு கூறி வைத்தியசாலையில் இருந்து விடுவித்து அனுப்பி வைத்தார் என்றார்.
இவர் புதன்கிழமை மாலை வீடு வந்து சோர்ந்துள்ளார்.காலில் மற்றும் உடல் பாகங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று அனு ப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மனிதர்களை மனிதர்களாக மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டிக் குணம் இரத்தத்தில் ஊறிய கேடுகெட்ட மனித மிருகங்கள் வாழும் அந்த மண்ணுக்கு இனியும் நமது உயிர்களை அனுப்பக்கூடாது.
ReplyDelete