Header Ads



ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் சவுதி அரேபிய அதிகாரிகள் குழு மட்டக்களப்பு விஜயம்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சர்வதேச இஸ்லாமிய கலாசார அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவரும் நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளருமான சைய்ஹ் ஹாலித் தாவுத் தலைமையிலான அரேபிய குழுவினர் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விமானம் மூலம் வருகை தந்தனர்.
          
மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவரும் பொருளாதார அபிவிருத்திப்பிரதியைமச்சரமான எம் எல் ஏ ஏம் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த குழுவினர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த சமூக சமய கலாச்சார அமைப்புகளின் தலைவர்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
            
பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த இக்குழுவினரை மாகாண சபை உறுப்பினர் எம் எப் சிப்லி நகர முதல்வர் எஸ் எச் எம் அஸ்பர் பிரதி முதல்வர் ஜெசீம்  கிழக்கலங்கை ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையின் முதல்வர் முஹம்மட் பஸீர் ஹிறா பௌன்டேசனின் பொறுப்பாளர் மௌலவி மும்தாஸ் தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியத் துறையின் பொறுப்பாளர்  அலியார் றியாழி ஜெம்மியாவின் தலைவர்  மௌலவி அலியார் உற்பட முக்கிய அதிகாரிகள் பலரும் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு சென்று அவர்களை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.