Header Ads



பொத்துவில் பெரிய பள்ளிவாயல் நிர்மானப்பணி தொடருமா..?


ஜே.இர்ஷாத் (ஷர்கீ)

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தொழுகையினை நிறைவேற்றக்கூடிய வசதிகளைக்கொண்ட  விசாலமா, பிரமாண்டமான,அழகிய தோற்றத்தை கொண்ட பள்ளிவாயல்கள் இருப்பதினையும், இதுபோன்ற ஒரு பள்ளிவாயலாவது எமது ஊரில் இல்லையே என்று கவலைப்பட்ட குறிப்பிட்ட ஒரு குழுவினரால் கடந்த 2008ம் ஆண்டு பொத்துவில் பெரிய பள்ளி வாயலை மஸ்ஜிதுல் அக்ஸாவின் தோற்றத்தில் புணர் நிர்மாணம் செய்வதென தீர்மானிக்கப்பட்டு, பொருளியலாளர் ஜப்பார் அவர்களை தலைவராகவும்,மெளலவி நுஸ்ரத் அவர்களை பொதுச்செயலாளராகவும் கொண்ட அக்குழுவினர் 2008.01.01ம் திகதி கூடிய கூட்டத்தில் கட்டுமாணத்திற்கு தேவையான பணத்தினை பொத்துவில் மக்களிடத்திலும்,வெளி பிரதேசங்களிலும் வசூலித்தல், சேகரிக்கப்படுகின்ற பணத்தினை கட்டுமான பணிக்கு மாத்திரம் செலவிடுதல், இணைய தலம் ஒன்றினை உருவாக்கி தகவல்களை அதனூடாக மக்களுக்கு பகிறங்கப்படுத்துதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

குறித்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாயலின் கட்டட வேலைகள் கைவிடப்பட்டதோடு, கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாத நிலையில்  காணப்படுகின்றன. நான்கு வருடங்களாக கட்டட வேலை இடை நிருத்தப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பாவனை செய்வதற்கு முடியாமல் துறுப்பிடித்து காணப்படுகின்றன.  

கைவிடப்பட்ட குறித்த பள்ளிவாயலின் புதிய கட்டட வேலையினை ஆரம்பித்து பொத்துவிலில் முதன் முதலாவது கம்பீரமான அழகிய தோற்றத்தைக்கொண்ட பள்ளிவாயல் உருவாகுவதற்கு பொத்துவில் படித்தவர்களும்,அரசில் வாதிகளும்,வசதி படைத்தவர்களும் முன்வருவார்களா???

பொத்துவில் சமூகம் இவ்விடயத்தில் சிந்திக்குமா?????? 

2 comments:

  1. இது புரியாத புதிராக இருக்கிறது. இது எங்களது ஊர் சம்பந்தப்பட்ட விடயம் மக்கள் ஒன்று பட்ட விடயம். தொழுபவர்களும் பிரிவுகளாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். ஒரு அமைப்பின் தலைவனும் இரு நாட்டின் தலைவனும் ஒன்றில்லாவிட்டாலும் பொறுப்புகள் ஒன்றே. இன்றைய நிலை ஆளுக்கொரு பள்ளிவாயல் கட்டுவதே...ஒன்றுபட்ட சமூகம் மிக அருகில் உள்ளது - அதனை வரவேற்க தயாராகுவோம்.

    ReplyDelete
  2. அடுத்த குழு நியமிக்க முன் முன்னர் நியமித்த குழு ஏன் அந்த வேலைத்திட்டத்தை கை விட்டார்கள் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நமது ஊரில் உள்ள சில பெரிய மனிதர்கள் நல்லது செய்யவும் மாட்டார்கள் (செய்ய முன்வந்த அந்த நல்லவர்ளை) செய்ய விடவும் மாட்டார்கள். மீண்டும் அவர்களுடன் பேசி அந்த வேலையை விட்ட இடத்தில் இருந்து தொடர அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க முயற்ச்சி செய்யுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.