Header Ads



வடக்கில் அடிப்படைவாத முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்


(Vi) வடக்கு மற்றும் கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக பூர்த்தியாகவில்லை என்று தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் குற்றம் சுமத்துவது உண்மையாகும். முஸ்லிம் அமைச்சர்கள் வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணிகளை ஆக்கிரமித்து அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அவ்விடங்களை வழங்கியுள்ளமையால் தமிழ் மக்களை மீள்குடியமர்த்த முடிவதில்லை என்று பொதுபல சேனா குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறான அடிப்படைவாத சக்திகளின் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் பல்துறைகளில் இலங்கை கண்டுள்ள பின்னடைவுகளை சீர்செய்து முழுமையான பௌத்த கலாசாரத்திற்குள் ஏனைய சமூகத்தினையும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கான விஷேட தேசிய தீர்மானங்களை இரு மாதத்திற்குள் வெளியிடவுள்ளதாகவும் அவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு 7 தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில்  நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பொதுபல சேனாவின் அமைப்பாளர் டிலானந்த விதானகே கூறுகையில்,

முஸ்லிம் மக்களையோ பள்ளிவாசல்களையோ பொதுபல சேனா உடைக்கவோ தாக்கவோ இல்லை. ஆனால் பல அடிப்படைவாத சக்திகள் பொதுபல சேனா மீது வீண்பழிகளை சுமத்தி வருகின்றன. ஹலால் விடயத்திலும் அவ்வாறே குற்றம் சுமத்தப்படுகின்றது. பௌத்தர்கள் ஹலாலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறும் போது அதனை திரிபுபடுத்தி இலங்கையில் ஹலாலை தடைசெய்ய வேண்டும் என்ற பிரசாரத்தை குறிப்பிட்டு சில குழுக்கள் பரப்புகின்றன.

முஸ்லிம்கள் எமது சகோதரர்களே, அவர்களை முஸ்லிம் அடிப்படை வாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அரசாங்கத்திற்குள் உள்ள அடிப்படைவாதத்திற்கு துணை செல்லும் முஸ்லிம் அமைச்சர்கள் வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடி அவற்றை அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளனர். இவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.



No comments

Powered by Blogger.