'இறுதி யுத்தத்தில் இராணுவத்தினர் பொது மக்களை காப்பாற்றினர்'
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அடிப்படை நீதிமன்ற அறிக்கையிலே இந்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் முதல் பகுதி இராணுவ தளபதியினால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment