Header Ads



கல்முனை - காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையில் ஐவேளை தொழுகைக்கான அதான்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் கீழ் ஆசியாவின் முதலாவது  பிரதான வீதியின் பொது மக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை  மாலை  மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையில் திறந்துவைக்கப்பட்டது.

இதன் பிரதிபலனாக பிரதான வீதியில் மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள விஷேட ஒலிபெருக்கி மூலம் ஐவேளை தொழுகைக்கான அதான் ஒலிபரப்பும் விஷேட தினங்களின் போது முற்றிலும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு அமைவான அம்சங்களும் இதில் ஒலிபரப்பப்படும்.

இவ் அங்குரார்ப்பண வைபவம் நகரசபையின் பதில்; தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்தகொண்டு இதன் கட்டுப்பாட்டறையினை இன்று மாலை திறந்து வைத்தார். 

இவ் வைபவத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் முன்னாள்  கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷியாட்இ அலி ஸப்ரிஇ பாகிர்இ ஜம்மியதுல் உலமா சபையின் காத்தான்குடி கிளைத் தலைவர் மௌலவி அலியார்(பலாஹி),பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹவின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சஜி உள்ளிட்ட ஊரின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 






8 comments:

  1. எரியும் நெருப்பில் எண்ணெய் வார்கிறார்கள்,அவர்களின் வாக்கிற்காக ..

    ReplyDelete
  2. roddula vaangu solluvathu antha makkah madinavile illa yamathu maganukku yavalavu pattu, viththiyasamana sevaiyallam sairaaru yamathu magan

    ReplyDelete
  3. this is the act of madness. allready there is the some reason to attack muslim this act will give more reason and budhist will argive that muslims are going to make another muslim country in budhist majourity country. this shows the iresponsible politicians act will turn even moderate sinhalese against muslims.this should be opposed by all muslims too.this is not the service to muslims.

    ReplyDelete
  4. சோறு ஆக்க காசில்லயாம், பணியாரம் சுட்டுத்தா என்டானாம்.

    ReplyDelete
  5. இவனுகள் நினைத்த மாதிரி மார்க்கத்தில் விளையாடுவதற்கு இஸ்லாம் என்ன இவனுகளுடைய அப்பன் வீட்டுச் சொத்தா? இப்படிஎல்லாம் மலினப்படுத்தி மார்க்கத்தை விளம்பரப்படுத்தச் சொல்லி இஸ்லாம் சொல்லித்தந்திருக்கிறதா? மாறாக இந்த செயற்பாடுகள் இஸ்லாத்தை கொச்சைப் படுத்துவதாகவும், மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தின் மேலுள்ள வெறுப்பை மென்மேலும் அதிகப்படுத்துவதாகவுமே அமையும். இதை காத்தான்குடி மக்கள் புரிந்து கொள்வார்களா?

    ReplyDelete
  6. Athan Kettawudan Saudi Arabia mathiri Tholuhaikkaha Shop Close panni thirakkappaduma?

    ReplyDelete
  7. நாட்டின் தற்போதைய நிலமையில் இது தோவைதானா?

    ReplyDelete
  8. சொல்லுற "அதானுக்கு" தொழுவதற்கு ஆட்கள் இல்லை. இதில் இது வேற. முதல்ல மக்களை தொழ அனுப்ப எதாவது ஒரு வேலைத் திட்டம் செய்யவும். பின்னர் வீதி வீதியா பாங்கு சொல்லலாம்.

    ReplyDelete

Powered by Blogger.