Header Ads



முஸ்லிம்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு..! எச்சரிக்கிறார் அமைச்சர் றிசாத்..!


குளியாப்பிட்டியில் பௌத்தசிங்கள இனவாதிகள் புனித இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி மேற்கொண்டுள்ள இனவாத ஊர்வலத்திற்கு தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் எல்லைக்கும் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை செம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தினமும் இலங்கையின் எங்காவது ஒரு மூலையில் பௌத்தசிங்கள இனவாதிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம் சமூகம் மிது அவர்கள் தொடுக்கும் போலி குற்றச்சாட்டுக்களில் எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் வீம்பு பிடித்தவர்களான முஸ்லிம்களை வம்புக்கு அழைக்கும் நோக்குடன்தான் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

பௌத்த சமயம்  அமைதியை போதிக்கையின் இவர்களோ வன்முறையில் நாட்டம்கொண்டு முஸ்லிம் சமூகம் மீது  வன்முறையை பிரயோகிக்கிறார்கள். இது எந்தவகையில் நியாயப்படுத்தக்கூடிய செயற்பாடு அல்ல. இதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. 

இன ஒற்றுமைக்கு சவால்விடும் இதுபோன்ற செயற்பாடுகளின் போது சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்ககூடாது. அவர்கள் தமது பணியை உரியமுறையில் மேற்கொண்டால் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான பகிரங்க ஊர்வலங்களை கட்டுப்படுத்தமுடியும்.

உலகளாவிய ரீதியில் 120 கோடி மக்களுக்கும் அதிகமாக மக்கள் பின்பற்றும் புனித இஸ்லாம் அமைதியையும், சமாதானத்தையுமே வலியுறுத்தி நிற்கிறது. இஸ்லாமிய வழிநடக்கும் இலங்கை முஸ்லிம்கள் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகள் பிரமிக்கதக்கவை.இந்நிலையில் ஒரு சிறு தொகையினர் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான மேற்கொள்ளும் இனவாத பிரச்சாரத்தை ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தின் எதிர்ப்பு நடவடிக்கையாக கொள்ளமுடியாவிட்டாலும் முஸ்லிம்கள் மீது தொடர் தேர்ச்சியாக நடைபெற்றுவரும் பௌத்தசிங்கள இனவாதிகளின் வன்முறை அடாவடி நடவடிக்கைகளை சகித்துக்கொள்ளவும் பொறுமையை முஸ்லிம்கள் இன்னும் இழந்துவிடவில்லை.

எனினும் முஸ்லிம்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை பௌத்தசிங்கள இனவாதிகளுக்கு கூறிவைக்க விரும்புகிறேன் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. ithai rauf hakeem parka villaya????

    ReplyDelete
  2. கை புண்ணை பார்க்க பூத கண்ணாடியா?பல தெரிவுக்குழுக்கள் தூங்கி கிடக்கிறது.சோனகர்களுக்கு சொரணை இல்லை.அரசாங்கத்தை பாதுகாக்கும் ஹக்கீம் பதவி விலக்கப்பட வேண்டும்.அப்பாவி மக்களிடம் அரசாங்கத்தை ஏசியும்,சர்வதேசத்திடம் புகழ்ந்தும் இரட்டைநாக்குடன் பேசுகின்றார்.நீங்கள் முன்னுதாரனம்மாய் முடிந்தால் பதவியை தூக்கி வீசுங்கள்.

    ReplyDelete
  3. SIR எங்கிருந்து வந்திச்சு இந்த தைரியம். நியாயமான பேச்சு. இதனை செயலாக்கி இருக்கலாம். சீண்டி பாக்க்கானுகள் SIR,
    அவனுகளை விடுங்க. ஆண்டவன் இருக்கான் ஒருநாளைக்கு சலலேங்கும்!

    ReplyDelete
  4. சிங்கள இனவாதிகளுக்கு நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகின்றோம் ' எம் நாட்டு தமிழ் மக்களையும் மற்றும் மியன்மாரில் உள்ள முஸ்லிம் மக்களையும் இன படுகொலை செய்தது போன்று ;இலக்கையிலுள்ள முஸ்லிம்கள் மீதும் உங்கள் தீவிரவாதம் தொடர்ந்தால் .....உங்களை நாங்கள் எச்சரிக்கின்றோம் ; உலகில் எந்த முலையில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கிறிந்தல்லாம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்

    ReplyDelete
  5. Hey guys....Please think before you post your comment...because we can not threaten or fight against them as we are scattered everywhere in the country..think about Muslims who lives in small groups in the middle of a sinhala villages....

    There may be well educated non-muslims may read the same and mis interpret it among their community against us...

    ReplyDelete
  6. இவைகளை இப்படியொரு முயற்சியுனூடாக முறியடிக்க எல்லா முஸ்லிம்களும் முயற்சித்தால் என்ன? அதாவது மாற்றின மக்களுக்கு பகிரங்க நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாத்தை சொல்ல முனைந்தால்! (கல்யாணங்களுக்காக வீன்விரயம் செய்கின்ற பணத்தை சாப்பாடு கொடுத்து அவர்களை அழைத்து சொற்பொளிவுகளை மேற்கொள்ளும் போது இரண்டு விடங்களில் இலாபம் கிட்டும் ஒன்று இஸ்லாத்தை விளங்கிய ஒரு சமூகம் உருவாகும் அடுத்து இஸ்லாம் வளர ஒரு வாய்பு உருவாகும்) இன்சாஅல்லாஹ் அலலலாஹ்வின் உதவி முஸ்லிம்களை வந்தடையும்.

    ReplyDelete
  7. masha allah allah ungalin valkayil barakath saizu matravarhalin sulshihalai vitrum allah kappatru vanaha ella purangalilum allah ungalukku uzaviyalanaha iruppanaha

    ReplyDelete

Powered by Blogger.