''உருகிய பிரார்த்தனை தீ ஆறாய் உங்கள் இருதயத்தை சுடும்''
காவியாறு கரை புரண்டு வந்தாலும் ஏகத்துவத்தின் பசுமை அழிந்து விடப்போவதில்லை.
ஒரு கூட்டத்தின் கட்டுக்கடங்காத இச்சையும், இனிமையற்ற வாழ்க்கையும்
இஸ்லாத்தின் மீது காழ்ப்புனர்வாய் மாறியது.
.
வீர வேஷத்தால் விரட்ட நினைப்பது பூனை புலியாக நினைப்பது போன்று
பூனை எப்போது புலியானது.
நமது உதிரத்தில் உமரின் வீரமும் கலந்துதான் ஓடுகிறது
தத்துவத்தில் தோன்றும் காவியாறு ஏகத்துவத்தில் கறையாகி விடுமா..?
சில ஒட்டுண்ணி சல்மான் ருஸ்திகளால் உரிமைகள் விற்கப்படலாம்
உணர்ச்சிகள் எங்களுடன்தான் இருக்கிறது
அவர்களின் வரலாறு கறைபடிந்த பக்கமாய் சந்ததிக்கு சென்றடையும்
பொறுமைக்கு அடக்கி ஆளுதல் என்று பொருள் கொண்டால் அது அறியாமை
உரிமையென்று வந்தால் ஒதுங்கி சென்று அடிமையாக நாங்கள் அரசியல் குப்பையல்ல.
ஏகத்துவ கட்டளைக்கு அடிபணிந்து முன் நடப்போம்
இறப்பு நேரினும் சரித்திர விதைகளாய் புதைக்கப்படுவோம்.
இருதயம் உருகிய பிரார்த்தனை தீ ஆறாய் உங்கள் இருதயத்தை சுடும்
நாங்கள் வாழ வந்தவர்கள் அல்ல ஏகத்துவத்தை விதைக்க வந்தவர்கள்
Post a Comment