Header Ads



மாலியில் முஸ்லிம் போராளி நிலைகளை ஆக்கிரமிப்பு பிரான்ஸ் படை கைப்பற்றியதாக அறிவிப்பு



மாலியின் கவோ பகுதியில் போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த விமான நிலையம், பாலம் ஆகியவை பிரெஞ்சு படையின் கட்டுப்பாட்டுகள் வந்துள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.

மாலியின் வடக்குப் பகுதியில் காவோ உள்ளிட்ட பல நகரங்கள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் பிரான்ஸ் மற்றும் மாலி ராணுவத்தினர் இருவாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்த ஆரம்பித்தினர். இதற்கு பதிலடியாக, போராளிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காவோ நகரில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம், பாலம் மற்றும் முக்கியமான பகுதிகள் மீது ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை இரவு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இச்சண்டை சனிக்கிழமை மதியம் வரை நீடித்ததாக பிரான்ஸ் ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்த தகவல் தெரியவில்லை. காவோ நகரில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நிலவரம் குறித்து அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.