Header Ads



நேத்ரா அலைவரிசையில் மீலாத் விசேட ஒளிபரப்பு


(என்.நஜ்முல் ஹுசைன்)

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா அலை வரிசை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 'அகிலத்தின்; அருட்கொடை' எனும் தலைப்பில் மாலை 4 மணி முதல் 6.30 வரை பல்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் மணிப்புலவர் மருதூர் மஜீத், கிண்ணியா அமீர் அலி, கிராமத்தான் கலீபா ஆகிய கவிஞர்கள் பங்கு கொள்ளும் விசேட கவியரங்கு, சமூகஜோதி ரபீக், நூர்ஜஹான் மர்ஸூக், என். நஜ்முல் ஹுசைன், எச்.எல்.எம் நிஸார் ஆகியோர் இயற்றி டோனி ஹசன், மொயீனா பேகம், டொக்டர் ஜமீல், வஃபா, முஹம்மத் நூஹாஜ் ஆகியோர் பாடிய இஸ்லாமிய கீதங்கள், காத்திபுல் ஹக் எஸ்.ஐ.நாகூர் கனி 'அழகிய முன்மாதிரி' பிற சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பேசும் 'ஊடுருவல்', உலமா சந்திப்பு, சிறுவர் நிகழச்சி போன்றவைகள் இதில் இடம்பெறும்.

முஸ்லிம் சேவை பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.கே.எம்.யூனூஸின் ஏற்பாட்டில் மபாஹிர் மஸூர் மௌலானா, அஸாரியா பேகம், முபாரக் மொஹிதீன் ஆகியோர் தயாரித்தளிக்கும் நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.எம். ஜிப்ரி தொகுத்து வழங்குகிறார்.

No comments

Powered by Blogger.