இலங்கைக்கு 60 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சவூதி அரேபியா
இலங்கையின் தேசிய வீதிக் கட்டமைப்பைப் புனரமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சவூதி அரேபிய அரசாங்கம் 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் யோசனைக்கமைய பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நிதியுதவியை, சவூதி அரேபியாவின் அபிவிருத்தி நிதியம் வழங்கவுள்ளது.
இந்த நிதியுதவி மூலம் இலங்கையின் தேசிய வீதிக்கட்டமைப்பின் சுமார் 144 கிலோமீற்றர் தூரமான பாதைகள் புனரமைக்கப்படவுள்ளன
Post a Comment