Header Ads



இலங்கை அரசியல் வாதிகள் 4 வகைப்படுவர் - அமைச்சர் டலஸ் சொல்கிறார்


இலங்கையின் அரசியில் வாதிகள் 4 வர்க்கங்களில் உள்ளடக்கப்படுவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெறும தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒரு சாரார் பிரச்சினை ஒன்று ஏற்படும் போது தாய் நாட்டின் பக்கம் ஆதரவாக உள்ளனர்.

இரண்டாவது தரப்பினர், சந்தப்பத்தை பயன்படுத்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர்.

மூன்றாவது தரப்பு அரசியில் வாதிகள் எதுவும் குறித்து கதைக்காமலும், செயற்படாமலும், சுகமாக இருந்தால் போதும் என்று எண்ணம் கொண்டு இருப்பவர்கள்.

நான்காவது வர்கத்தினர், இந்தப்பக்கமும், கதைப்பார்கள், அந்த பக்கமும் கதைப்பார்கள். ஒரு பக்கம் என்று அவர்களுக்கு இல்லை.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் இலங்கைகை பொறுத்தவரையில், முதலாம் தாரப்பு அரசியல் வாதிகள் குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் டலஸ் அழகபெறும குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.