Header Ads



சர்ச்சைக்குரிய அமெரிக்க பெண் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டார் ; தூதரகம் அறிவிப்பு


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அரசுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தியுள்ளது. இந்தப் பெண் அதிகாரி டுபாயிலிருந்து நேற்று முன் தினம் அதிகாலை இலங்கைக்கு வந்திருந்தார்.

இதன்போது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அவர் மறுத்தமை குறித்து தகவல் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.