Header Ads



மெல்போர்ன் நகரில், இரங்கற் கூட்டம்

கடந்த வாரம் இலங்கையில்  ஏற்பட்ட துயர சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நாட்டில் அமைதியும் வேண்டி மேற்கொள்ளப்படும் பிரார்த்தனை மற்றும் இரங்கற் கூட்டம் ஒன்றை IMAN (institute of Muslim Academic Network Australia Inc. ஏற்பாடு செய்துள்ளது. 

இவ்விரங்கற் கூட்டத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பல்லின மற்றும் பல் சமயத் தலைவர்கள், இலங்கை கொன்சுலரின் பிரதிநிதி மற்றும் சில உள்ளூர் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும்  பங்குபற்றவுள்ளனர். 

இந்நிகழ்வு   27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு melbourne புறநகராகிய Hoppers Crossing இலுள்ள Central Park Community Center என்ற சமூக நிலையத்தில் இடம்பெறவு

Melbourne புறநகரப் பிரதேசங்களில் வாழும் அனைத்து இலங்கையர்களும் இதில் பங்குபற்றுமாறு IMAN அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

தகவல்: IMAN (institute of Muslim Academic Network Australia Inc. Melbourne, Australia

No comments

Powered by Blogger.