Header Ads



ராஜித்தவை காணவில்லை


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வீட்டை விட்டு வெளியேறி தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கிரிந்த துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை புறக்கணித்து வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இதன்படி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.