Header Ads



ஜந்துலாம்பு சந்தியில் சந்தேகத்திற்கிடமான, மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப்பட்டது

கொழும்பு புறக்கோட்டை, ஜந்து லாம்பு சந்தி பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளை சோதனை செய்வதற்காக வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 

இன்று பகல் 01.50 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த மோட்டார சைக்கிள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், அதில் இருந்து எவ்வித வெடிபொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. 


No comments

Powered by Blogger.