Header Ads



"தாக்குதலை மேற்கொண்டவர்களை, முஸ்லிம்களாக கருத வேண்டாம்"


தீவிரவாத்தை ஒழிப்பதற்காக இந்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பொது மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

தாக்குதலை மேற்கொண்டவர்களை முஸ்லிம்களாக கருத வேண்டாம் எனவும் இந்நாட்டில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் மார்க்கம் முற்று முழுதாக தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தீவிரவாத்தை அழிப்பதே நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு தரப்பினர் மீது குற்றம் சுமத்துவது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். 

அரசியல் இலாபத்தை எதிர்ப்பார்க்காது அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.