Header Ads



உதவி கல்விப் பணிப்பாளருக்கும், நீர்கொழும்பு வலய தமிழ்மொழி அதிபர்களுக்கும் சந்திப்பு

 
(எம்.இஸட். ஷாஜஹான்)


மேல் மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கான உதவி கல்விப் பணிப்பாளருக்கும் நீர்கொழும்பு வலய தமிழ் மொழிப் பாடசாலை அதிபர்களுக்கும் இடையிலான சந்திப்பு


மேல் மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கான  கல்விப் பணிப்பாளர் ஏ. எஸ். நஜீப்  அவர்களுக்கும் நீர்கொழும்பு வலைய தமிழ் மொழி பாடசாலை அதிபர்களுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை (11) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

 விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. இதில் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, அல் - ஹிலால் மத்திய கல்லூரி, அல் பலாஹ் மத்திய கல்லூரி, தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம், வெளிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் மற்றும் நீர்கொழும்பு வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி காஞ்சனா சிவா ஆகியோர் பங்கு பற்றினர்.


நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம், கல்வி அபிவிருத்தி, வலய தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு பொறுப்பாக கல்வி அதிகாரி ஒருவர் நீண்ட காலமாக இல்லாமை மற்றும்  நிலவும்  பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.