சுட்டுக்கொல்லப்பட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர், டேன் பிரியசாத் மீதான குற்றச்சாட்டுக்கள்
டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6 ஆவது மாடியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை,
தென்னிலங்கையில் தமிழர்சார் நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடங்களில் வன்முறையில் ஈடுபட்டமை,
சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான செயற்பாடுகள்,
போதைப்பொருள் கடத்தல், அதிகார துஷ்பிரயோகம்
நீதிமன்ற உத்ரவுகளுக்கு மதியாமை
பிணை நிபந்தனைகளை மீறியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் டான் பிரியசாத் மீது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment