Header Ads



இரவில் கிடைத்த கடிதம், இரவில் கையொப்பமிட்டு, இரவிலேயே IMF ற்கு அனுப்பப்பட்டது


சீன எக்சிம் வங்கியிடமிருந்து  நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு  அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட  உடன்பாட்டு  கடிதம் அன்றைய தினம் இரவே IMF ற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க  பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன்  ஒப்பந்தம்  செய்துகொள்ளப்பட்டதன்  பின்னர் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும்   வீதி    வரைபடம்  என்பவற்றுடன்  அந்த ஒப்பந்தத்தை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக  ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்


அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு  மேலதிக நிதி வழங்குதல்  என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும்  திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும்    வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள     அமுல்படுத்தியதாகவும்  ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.