Header Ads



ரயிலில் மோதி தம்பதியினர் மரணம்

 


தெஹிவளை ரயில் கடவையில் நேற்று (04) மாலை ஏற்பட்ட விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.


கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி இவர்கள் உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.