Header Ads



காப்பாற்றப்படுமா கபூரியா..? வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்


- ஏ.ஆர்.ஏ.பரீல் -


பல தசாப்த வர­லாற்­றினைக் கொண்ட மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியும், கல்­லூ­ரியின் பொரு­ளா­தார நன்மை கருதி வக்பு செய்­யப்­பட்ட மத்­திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன.

வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்ள கபூ­ரி­யா­வையும் அதன் சொத்­துக்­க­ளையும் கையா­டு­வ­தற்கு வக்பு செய்த குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவரே முனைவது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். வக்பு சொத்­துக்கள், அல்­லாஹ்வின் சொத்­துகள் அதில் கைவைப்­ப­வர்கள் நிச்­சயம் அல்­லாஹ்­வினால் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.


கபூ­ரி­யாவும், சுலைமான் வைத்­தி­ய­சாலை காணியும்

மர்ஹும் எம்.டீ.எச்.அப்துல் கபூரின் சிந்­த­னையில் 1931 இல் உரு­வா­னதே ‘மஹ­ர­கம கபூ­ரியா கல்­லூ­ரி’­. இக்­கல்­லூரிக்கென 17.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதே வேளை இக்­கல்­லூ­ரியின் செயற்­பா­டு­க­ளுக்­கா­க மர்ஹூம் அப்துல் கபூர் மத்­திய கொழும்பு கிரேண்ட்­பாஸில் 2.5 ஏக்கர் (சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த) காணியை வக்பு செய்­தி­ருந்தார்.


1931 முதல் 1938 வரை கபூ­ரி­யாவின் ஸ்தாபக அதி­ப­ராக இந்­தி­யாவைச் சேர்ந்த அலியார் மரிக்கார் கட­மை­யாற்­றினார். 1936 முதல் மெள­லானா உமர் ஹஸ­ரத்தும், 1963 முதல் சம்­சுதீன் ஹஸ­ரத்தும், 1982 முதல் 2010 வரை அஷ்ஷெய்க் முபாரக் ஹஸ­ரத்தும் இவர்­களைத் தொடர்ந்து ஏ.ஆர்.எம்.மஹ்ரூப், எம்.எம்.எம்.லாபீர், எம்.எப்.எம். ஹஸன் பாரிஸ் ஆகியோர் அதி­பர்­க­ளாக பணி­யாற்­றி­யுள்­ளனர். தற்­போது எஸ்.எம்.நபார் அதி­ப­ராக பணி­யாற்­று­கின்றார்.


1995க்குப் பிற்­பட்ட காலத்தில் அதிபர் முபாரக் ஹஸ­ரத்­திற்கும் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவில் விரிசல் ஏற்­பட்­டது. இதன் கார­ண­மாக நம்­பிக்­கை­யா­ளர்­களால் கொழும்பு, கிரேண்ட்பாஸ் சுலைமான் வைத்­தி­ய­சாலை மூலம் பெறப்­பட்டு வந்த உத­வித்­தொகை எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி 1994-–2013 வரை இடை நிறுத்­தப்­பட்­டது.

1980 இல் இக்­கல்­லூரி காணி மற்றும் உட­மைகள் அர­சாங்­கத்தால் சுவீ­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதற்கு எதி­ரான போராட்­டத்தில் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் முக்­கிய பங்­கினை வகித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.


கல்­லூ­ரியை மேலும் தர­மு­யர்த்தும் நோக்கில் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்கும், முகா­மைத்­துவ சபைக்­கு­மி­டையில் 2018.05.09 ஆம் திகதி புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. என்­றாலும் பின்பு நம்­பிக்­கை­யாளர் சபை எது­வித கார­ண­மு­மின்றி அவ் ஒப்­பந்­தத்தை ரத்துச் செய்­தது.


இந்­நி­லையிலேயே நம்­பிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வர் கபூ­ரி­யா­வையும் சொத்­துக்­க­ளையும் குடும்பச் சொத்­தாக கருதி செயற்­பட்டு வரு­கிறார்.

”கபூ­ரி­யா­வுக்கு சொந்­த­மான காணிகள் வக்பு செய்­யப்­ப­ட­வில்லை. அது எமது தனியார் உடமை. பழைய மாண­வர்கள் இதனை அத்­து­மீறி கைய­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்” என அவர் தெரி­வித்து வருவதுடன் பல சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். நம்­பிக்­கை­யா­ளர்­களால் பழைய மாண­வர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.


வக்பு நியாய சபையில் வழக்கு


கபூ­ரியா அர­புக்­கல்­லூரி அதன் நம்­பிக்­கை­யா­ளர்­களால் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பழைய மாணவர் சங்கம் (முகா­மைத்­துவ சபை) வக்பு நியாய சபையில் வழக்கு தாக்கல் செய்­தது. கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரிக்கு கிடைக்க வேண்­டிய வரு­மா­னங்கள் கிடைக்­காமை, வக்பு சொத்து தனியார் நிறு­வ­னத்­துக்கு (கிரேணட்பாஸ் காணி) குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை என்­ப­ன­வற்­றுக்கு எதி­ரா­கவே இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது வழக்கு விசா­ர­ணையில் உள்­ளது.


இந்­நி­லையில் வக்பு நியாய சபை கல்­லூ­ரியை நிர்­வ­கிப்­ப­தற்கு 11 பேர் கொண்ட முகா­மைத்துவக் குழு­வொன்றை நிய­மித்­தது. இத­னை­ய­டுத்து கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யா­ளர் சபை பழைய மாணவர் சங்கம் தாக்கல் செய்­துள்ள வழக்­கு­க­ளுக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் (Appeal Court) மனு­தாக்கல் செய்­தது.


மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் கல்­லூரி நம்­பிக்­கை­யா­ளர்­க­ளினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் கபூ­ரியா கல்­லூ­ரியும், சொத்­துக்­களும் தர்ம நம்­பிக்கை நிதி­யத்தின் கீழ் உள்­ள­டங்­காது. இது குடும்ப நம்­பிக்கை நிதி­ய­மாகும் என மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இந்­நி­லையில் வக்பு நியாய சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட பழைய மாண­வர்­களை உள்­ள­டக்­கிய முகா­மைத்­துவ குழு­வுக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ர­வினை விதித்­துள்­ளது. அவர்­கள் கல்­லூரி வளா­கத்­துக்குள் பிர­வே­சிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ் ஏற்­பா­டுகள் கல்­லூரி நம்­பிக்­கை­யா­ளர்­களின் இலக்கு என்ன என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கி­றது. இத்­த­டை­யுத்­த­ர­வுக்கு எதி­ராக முகா­மைத்­து­வக்­குழு உயர்­நீ­தி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­துள்­ளது.


கபூ­ரி­யா­வையும் அதன் வக்பு சொத்­துக்­க­ளையும் பாது­காக்க போராட்டம்


கபூ­ரியா அர­புக்­ கல்­லூ­ரி­யையும், அதன் வக்பு சொத்­துக்­க­ளான கிரேண்ட்­பா­ஸி­லுள்ள 2.5 ஏக்கர் காணி உட்­பட ஏனை­ய­வற்­றையும் பாது­காத்­துக் ­கொள்­வ­தற்­காக கொழும்பு பகு­தியில் பல்­வேறு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.


கபூ­ரி­யாவின் நட­வ­டிக்­கைக்­குழு (Action Committee) என குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழுவின் தலை­வ­ராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இக்­குழு கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் ஊடக மாநா­டொன்­றினை நடாத்­தி­யது. இதில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினர்.


கபூ­ரியா கல்­லூ­ரிக்கு ஆபத்து


தற்போது கபூ­ரியா அர­புக்­கல்­லூரி வளாகத்தினுள் சுமார் 500 மீற்றர்களுக்கும் மேலான நீளமான மதில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரு­கி­றது. இச் சொத்துக்கு உரிமை கோரும் நம்பிக்கையாளர்களே இதனை முன்னெடுக்கின்றனர். இது கல்­லூரி கட்­டி­டங்­க­ளையும் ஏனைய வெற்றுக் காணி­யையும் பிரிக்கும் செயற்­பா­டாக அமைந்­துள்­ளது. அத்­தோடு இச்­செ­யற்­பாடானது கல்­லூரி கட்­டி­டங்கள் அமைந்­துள்ள பகு­தியைத் தவிர ஏனைய பகு­தியை விற்­ப­தற்கு அல்­லது குத்­த­கைக்கு விடு­வ­தற்­கான முயற்சி என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


எனவே நூற்­றாண்டை அண்­மித்துக் கொண்­டி­ருக்கும் இக்­கல்­லூ­ரியைப் பாது­காப்­பது சமூ­கத்தின் பொறுப்­பாகும்.


கபூரியா அரபுக்கல்லூரி சொத்துகள் தர்ம நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ளடங்குகிறதா? இன்றேல் அவை குடும்ப நிதியமா? என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.


இச்­சூழ்­நி­லையில் வக்பு செய்­யப்­பட்­டுள்ள கபூ­ரி­யா­வுக்கே இந்­நி­லை­யென்றால் நாடெங்கும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் பொதுச் சொத்­துகள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவற்றுக்கும் எதிர்காலத்தில் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கபூரியாவைக் காப்பாற்றிக்கொள்ளவும் நாடெங்கும் பரந்துள்ள வக்பு சொத்துக்களை பாதுகாக்கவும் அனைத்து தரப்புகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.- Vidivelli

No comments

Powered by Blogger.