Header Ads



கோட்டாவையும், ரணிலையும் கைது செய்ய வலியுறுத்தி புதுடெல்லியில் இலங்கைத் தூதரகத்திற்கு முன் போராட்டம்


டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் எழுப்பினர்.

இலங்கையில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டை நடத்தியதாக இந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் விரைவாக புதிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தின்போது மாணவர்கள் குரல் எழுப்பினர்.

சீனா, இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் இதே கெளடில்யா மார்க் பகுதியில் உள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்துவது குறித்த தகவலறிந்ததும் டெல்லி போலீஸார் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தூதரகத்தை முற்றுகையிடும் வகையில் முன்னேறினர்.

இதையடுத்து சிலரை கட்டாயப்படுத்தி அருகே இருந்த போலீஸ் வாகனங்களில் ஏற்றி காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். மாலையில் இந்த மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொண்டு அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

1 comment:

  1. Our whole heartedly express our thanks and appreciations for all those students who participated in this awareness demonstration which implies that the justice is prevailed in India and all parts of the world.

    ReplyDelete

Powered by Blogger.