தேன் பருக்கப்பட்டு யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டது - தாயாருக்கு பாற்சோறும் பழவகைகளும் வழங்கப்பட்டது.
- என்.ஆராச்சி -
ரம்புக்கனை- பின்னவலயில் உள்ள யானைகள் காப்பகத்தில் புதிதாக பிறந்த 3 யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
,இதற்கமைய குறித்த 3 யானைக் குட்டிகளுக்கும் திசா, சஞ்ஞன மற்றும் நீலமணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்போது யானைக் குட்டிகளின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகள் திறக்கப்பட்டு யானைக்குட்டிகளுக்கு தேன் பருக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய் யானைக்கு பாற்சோறு மற்றும் பழவகைகளும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
Post a Comment