8,200 கோழிகள் தீயில் கருகின - தீயணைப்பு பிரிவினரால் தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது
கொட்டதெனிய - வராகல பகுதியில் உள்ள கோழி பண்ணையில் இன்று (11) ஏற்பட்ட தீப்பரவலில் 8,200 கோழிகள் இறந்துள்ளன.
நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Post a Comment