அக்குறணையில் 2 சமையல் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு
- மொஹொமட் ஆஸிக் -
அக்குறணை பிரதேசத்தில் நேற்று (08) இரண்டு சமையல் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை- தெழும்புகஹவத்தை பிரதேசத்திலும் பானகமுவ பிரதேசத்திலும் இவ் இரு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதன் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் வெடித்துள்ளதுடன் ,தெழும்புகஹவத்தையில் வெடித்த அடுப்பு அணைக்கப்பட்டிருந்த நிலையில் வெடித்துள்ளது.
இது தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது ஒரு புதினமான செய்தியாக இருக்கின்றது. எங்கு வெடித்தாலும் அது அக்குரணையில் வெடிக்காது.
ReplyDelete