'ஒரே நாடு – ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழர்கள் நியமனம்
”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு 03 தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயாப்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஜனாதிபதி செயலணிக்கு நியமித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் 11 அங்கத்தவர்களை கொண்ட ஜனாதிபதி செயலணி ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த செயலணிக்கு மேலும் மூன்று தமிழ் உறுப்பினர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
As far as I know it was not 11 but 13. Irresponsible news
ReplyDeleteசட்டம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை சட்டம் இயற்ற தலைவன் பொறுப்பு!!!
ReplyDelete*குருடர்கள் யானை பாக்க ஆசைபட்டார்களாம்*!!!
இந்த செயலணியின் பெயரை 'நாடும் இல்லை, சட்டமும் இல்லை' என உடனடியாக அதன் பெயரை மாற்ற வேண்டும்.
ReplyDeleteLaw in the hand of Terror Racist Buddhist Monk. Very Shame and Dangerous..
ReplyDelete