Header Ads



அசாத் சாலியின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு, உயர்நீதிமன்றத்தினால் விசாரணைக்கு ஏற்பு


மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம், இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரியுமே மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனு மீதான விசாரணைக்கு டிசம்பர் 15 ஆம் திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. 


No comments

Powered by Blogger.