பிரித்தானியாவில் புலிகளின் தடையை, தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானம் - இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு அந்த நாட்டு உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்குள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கான தடையை நீக்குமாறு இதற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி அமைப்பு ஒன்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியாக 30 நாடுகளுக்கு மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment