Header Ads



கற்பித்தலை கடமைக்குச் செய்யாது, இறை வணக்கமாகச் செய்த ஜமீல் ஆசிரியர்


- Yarl Azeem -

இனிய நண்பன் ஜமீல் ஆசிரியரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குளிர்மையான அவரது புன்னகையும் ,மென்மையான பேச்சும், எல்லோரிடமும் நட்புணர்வுடன் பழகும் நற்பண்பும்  அவரை எல்லோருக்கும்  நண்பனாக்கியது .

   வசீகரமான தோற்றத்தை மட்டுமல்ல… வசீகரமான கற்பித்தலால் மாணவர்களை வசப்படுத்தி   கற்றலில் மாணவர்களுக்கு நாட்டத்தை ஏற்படுத்தக்கூடிய  நல்லாசானாகத் திகழ்ந்தவ ஜமீல் சேர்!

   கணித்த்தை இனிப்பாக்கும் வித்தை தெரிந்தவர்..முதல் வரிசை மாணவர்களை  மட்டுமன்றி கடைசி வரிசை  மாணவர் வரை கரிசனையுடன் கற்பிக்கும் கடமையுணர்ச்சி மிக்க ஜமீல் கற்பித்தலை கடமைக்குச் செய்தவரல்ல..இறை வணக்கமாகச் செய்தவர்..

       யாழ் மஸ்ற உதீன் கல்லூரி,யாழ் இந்துக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கல்வி கற்ற ஜமீல்,யாழ் ஒஸமானியாக் கல்லூரி, அ/இக்கிரிகொல்லாவ முஸ்லிம் வித்தியாலயம்,ஹொரேதொடுவ மு.வி ,தெஹிவளை மீலாத் மு.வி ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணி புரிந்தார்.

       இவரிடம் கல்வி கற்று ,தற்போது உயர் பதவி வகிக்கும் இவரது மாணவர்கள் ,அவரதுகற்பித்தல் முறையையும் ,அர்ப்பணிப்புடனான அவரது சேவைகளையுடன் கண்ணீர் மல்க  நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

      ஆற்றல்மிகு நல்லாசானாகவும், உயர்பண்பு மிக்க நண்பனாகவும் வாழ்ந்த்ஜமீல் ஆசிரியரின் கல்விப்பணியை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!

அவரது மண்ணறையை விசாலமானதாகவும் வெளிச்சமுள்ளதாகவும் ஆக்குவானாக! சுவனத்து மாளிகையைச் சொந்தமாக்குவானாக!

1 comment:

  1. jameel sir was my class teacher for many years. His demise is a shock for every one. May Allah accept his wonderful service.

    ReplyDelete

Powered by Blogger.