இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்கு கீழ், வந்துவிட்டது என கருதுவது பிழையானது - கம்மன்பில
தடுப்பூசி குறித்து சீனத்தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதால் இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்கு கீழ் வந்துவிட்டது என்று கருதுவது பிழையானது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சினோஃபாம் தடுப்பூசி இலங்கைக்கு எந்த விலைக்கு வழங்கப்பட்டது? ஏனைய நாடுகளுக்கு எந்த விலைக்கு வழங்கப்பட்டது? என்பது தொடர்பாக சீன அரசாங்கமே அறிவிக்க முடியும்.
இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் சீன அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ள நிலையில், அந்த அறிவிப்பு சீன அரசாங்கத்தின் அறிவிப்பாகவே கருதப்பட வேண்டும்.
இதற்காக இலங்கை சீனாவிற்கு கீழ் வந்துவிட்டது என்று கூற முடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சீன ஆதிக்கத்தை விட இலங்கை இவ்வளவு விரைவில் இனவெறி ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது என்பதே ஆச்சரியம் (இதைவிட வேகத்தில் இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த தீர்ப்பு இலங்கைக்கும் வரப்போகிறதோ)
ReplyDelete