அரசுக்கு விரைவில், பாடம் புகட்ட தயாராகவுள்ளேன் - ரணில்
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாட்டு மக்கள் இன்று கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் சிக்கித் தவிக்க அரசே முழுக்காரணம். கொரோனாவின் மூன்றாவது அலை உருவெடுத்தபோது 'போர்ட் சிட்டி' ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக நாட்டை ஒரு மாதத்துக்கு மேல் முடக்காமல் அரசு இருந்தது.
இதனால் நாடெங்கும் கொரோனா பரவியது. தற்போது வீட்டுக்குள்ளும் கொரோனா சென்றுள்ளது. அதனால் வீடுகளுக்குள்ளேயே மரணங்கள் அதிகரிக்கின்றன. ஆரம்பத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
இதன்காரணமாக நாடு இன்று பேராபத்தைச் சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்.
அரசுக்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்" - என்றார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிப்பதற்கான தகுந்த சுபநேரத்தை கணித்து வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்காக அவர் சோதிடர்களைச் சந்தித்து வருகின்றார் எனவும் அறியமுடிந்தது. தனது பெயரைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கடிதம் அனுப்புவதற்கு ஒரு சுபநேரமும், நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்குப் புறம்பான சுபநேரமும் அவர் கணித்து வருகின்றார் எனவும் தெரியவந்தது. Tamilwin
Dealer அய்யா பாவம். ஏட்டு சுறக்காய் கரிக்கு உதவாது.ஆனாள் இந்த அயய்யா எதற்கும் உதவாத மகா துரோகி வாய்வெட்டு வீரன்.
ReplyDeleteஅவமானத்தை தனியுடைமையாக்கியது போதாதென்று கட்சி யையும் காட்டி கொடுத்த கேவலமான நிலையில் கோவனம் கட்ட வேண்டிய ரோசங்கெட்ட ரனிலே நீ இன்னும் பாடம் புகட்ட முற்பட்டால் முழு நாட்டிலுமே நாணயம் கெட்ட தற்போதய ஆட்சியாளர்கள் போல் தரங்கெட்ட மனிதர்கள் மட்டுமே மிஞ்சுவர்.
ReplyDeleteAs you say, people of Sri Lanka are not stupid. That is why they kicked you out at the polls.
ReplyDeleteநாட்டை ஜோதிடக்காரர்களிடம் ஒப்படைத்துவிடுவார். கவனம்
ReplyDelete