Header Ads



சலுகை விலை பொருட்கள், விற்பனை காலம் மேலும் நீடிப்பு


சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் வழங்கப்படும் 27 பொருட்களை மேலும் மூன்று மாத காலத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருகின்ற காரணத்தினால், நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதொச நிறுவனம் செயற்படுகின்றதாகவும், சதொசவின் சலுகைப் பொதிக்கு தற்போது பாரிய கேள்வி காணப்படுவதாகவும் சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.