Header Ads



பயங்கரவாத புலிகளை ஊக்குவிக்கின்ற சகல, குழுக்களும் தடை செய்யப்படும் - உதய கம்மன்பில


புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகள் மற்றும் பிரிவினைவாதங்களை ஊக்குவிக்கின்ற அனைத்துக் குழுக்களையும் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இயங்குகின்ற பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கான தடைகளை மீளமுலாக்கும் வர்த்தமானியை அரசாங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, அவ்வாறான அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் தயாராக இல்லை என்று கூறினார்.

புலம்பெயர்ந்த சமூகத்துடன் நெருங்கிய தொடர்பினை பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஆனால் புலிகள் அமைப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் செயற்படுகின்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் அரசாங்கம் எந்த தொடர்பையும் பேணாது என்று அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்கப்படுத்துகின்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது உடனடியாக தடை ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. First must Ban Hiru,Derena channels then after we should consider other channels.

    ReplyDelete

Powered by Blogger.