துபாயிலிருந்து தபாலில் இலங்கைக்கு, அனுப்பப்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றல்
போலி முகவரி குறிப்பிடப்பட்டு துபாயிலிருந்து தபாலில் அனுப்பப்பட்ட போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட 02 பொதிகளுக்குள் கஞ்சா மற்றும் குஷ் போதைப்பொருட்கள் காணப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி துபாயில் வசிக்கும் ஒருவருக்கு பிரான்ஸிலிருந்து பொதியொன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த பொதியிலும் சுமார் 4,900 போதைவில்லைகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Dubai good develop country
ReplyDelete