Header Ads



இது பௌத்த நாடு, ஏனைய மதத்தவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் போது தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சிங்கள மக்கள் போராட்டம் நடத்தும் போது காலிமுகத்திடலில் வைத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் இவ்வாறு பேரணி செல்வதற்கு அனுமதிவழங்கியிருக்கின்றனர்.

குறித்த பேரணி இடம்பெற்ற இடத்தில் தான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பேரணியில் கலந்துகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டியிருப்பேன்.

நாட்டில் அனைவரும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்கள் இது குறித்து விழிப்புடன் இருங்கள். இதற்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். யார் என்னை தடுக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் ராஜபக்சர்கள் தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள்.

நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனினும், அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. தலையில் தட்டிட்டு

    ReplyDelete
  2. இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு. அந்த அடிப்படையில் தான் சுதந்திரம் வழங்கப்பட்டது.

    ReplyDelete
  3. புத்தர் சொல்லி தானோ உனது மகன் இரவு களியாட்ட விடுதியில் கொலைக்குற்றம் புரிந்தான்... ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அடாவடித்தனம் செய்தது... ஒவ்வொரு நாளும் மாலையில் கழுத்துவரை குடித்துவிட்டு மது, மாது ,களவு ,பொய் பித்தலாட்டம்.... அடாவடித்தனம் அடக்குமுறை வன்முறை.. எங்களது ஆசையும் நீங்கள் உண்மையான பௌத்தராக இருந்தால் புத்தமதத்தை பின்பற்றுமாறு தான் நாமும் சொல்கிறோம்.

    ReplyDelete
  4. அவர்கள் புத்தர் உங்களுக்கு சொன்னதைதான் செய்யச்சொல்கின்றார்கள் யாருக்கும் அநியாயம் செய்யாதீர்கள் பௌத்தர் சொன்னார் அதை கடைபிடியுங்கள் உங்களுக்கு ஞாபகம் செய்து உணர்த்துகின்றார்கள் நீங்கள் உண்மையான புத்தனாக இருந்தால் புத்தர் சொன்னதை செய்யுங்கள்!

    ReplyDelete

  5. ஐயா, இது உங்களுடைய ஓய்வு காலம். உங்களைவிட வல்லவர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவரகளை வேலை செய்ய விடுங்கள். அரசியலில் புகத்தான் வேண்டும் என்றால் ரத்ன தேரரரைப் போல் MP ஆக முயற்சியுங்கள்.

    ReplyDelete
  6. சாகும் நிலைமையில் வைக்கோலில் படுத்திருந்த கிழட்டு நாய் கத்துகிறது.அதன் குரலை பக்கத்திலிருக்கும் எந்த நாய்களும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் கிழட்டு நாய்க்கு இளமை வரும் என்ற எதிர்பார்ப்பில் அது கத்துகி்ன்றது.

    ReplyDelete
  7. Pooda porukki street dog

    ReplyDelete

Powered by Blogger.