ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது கொரோனா, ஒழிப்புக்கு இடையூறாக உள்ளது
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தார். அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பாலித்த கருணாபேம கூறினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்கு, மீள் பரிசீலனை செய்து கொண்டு நடவடிக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வைத்தியசாலைகளில் போதுமான அளவு வசதி உள்ளதாக அவர் கூறினார். பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட பிரதேச நிறுவனங்களை இணைத்துக் கொண்டு கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக டொக்டர் பாலித்த கருணாபேம கூறினார்.
பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் புதிதாக இனங்காணப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ், ஏனைய வைரஸை விட 50 வீத வேகத்தில் பரவக்கூடியது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் நீலகா மலவிகே இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்த கொரோனாவை காரணம் காட்டி எப்படி எப்டியெல்லாம் காய்நகர்த்துகின்றாகள் என்பதை மற்ற யாரும் அறிந்திட மாட்டார்கள் என்று இவர்களின் நினைப்பபு "கிணற்றுக்குள் வாழும் தவளையை போன்று". அல்லாஹ் ஒருவனையே நம்பி வாழும் முஸ்லீம்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள்.
ReplyDeleteதம்பி அல்லாஹ் வின் அடிமை கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லதுபா.
ReplyDeleteஅறிவு கேட்ட ஜென்மங்கள்,
ReplyDeleteஏன் அவர்களை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.