Header Ads



தேசியப் பட்டியலுடன் காணாமல் போன, பிக்குவை கைதுசெய்ய நடவடிக்கை


தற்போது காணாமல் போன எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரைக் கைது செய்யக் கண்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அஸ்கிரிய மகா விகார வளாகத்தில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழமையான பழங்கால சொத்துக்கள் குறித்த தேரரால் அழிக்கப் பட்டுள்ளதாக வழங்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

குறித்த விகாரையின் தலைமை தேரர் கண்டி பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரரைக் கைது செய்ய ஏற்கெனவே பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விரைவில் விமல திஸ்ஸ தேரர் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.