பல்டி அடித்தார் வேட்பாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர், அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் தலைமையில், திருகோணமலையில் உள்ள இவருடைய இல்லத்தில், இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்தக் கட்சி மாற்றம் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 4ஆம் இலக்கம் கொண்ட பேரின்பவரதன் லக்மன் என்பவரே, இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்
Post a Comment