Header Ads



ரிஸ்வானின் தியாகத்தை புகழும் சிங்கள சகோதரர்கள், அவருடைய சுவனத்திற்காக பிரார்த்தனை

- Risvi Hussain -

இன்று ஒரு பெண் உடைய உயிரை பாதுகாக்க தன் உயிரை கொடுத்த ரிஸ்வானை அன்புடன் நினைவு கூறும் பல சிங்கள சகோதரர்களின் பதிவுகளை பார்த்தேன்.பலர் சுவனம் செல்லவும் பிரார்த்தனை செய்தனர்.

நெத்.எப்.எம் போன்ற இனவாத ஊடகங்கள் கூட பைத்தியக்கார சஹ்ரானின் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் விரோத பதிவுகளை அல்லது சிறிய தவறுகளை கூட பெரிதாக தலைப்பிடுவதும் அதற்கு கீழால் பல நூற்றுக்கணக்கான இனவாத கருத்துக்கள் பகிரப்படுவதும் வழமை.

ஆனால் இன்று சகோதரர் ரிஸ்வானின் தியாகத்தை அவர்களே புகழ்கின்றனர். அவரை வீரர் என்கின்றனர். ஒரு பதிவில் 300 க்கும் அதிகமானவர்கள் அவரை புகழ்ந்தனர். சிங்கள மக்கள் அவருடைய சுவனத்திற்காக பிரார்த்தனை செய்கின்றனர்..சிங்கள மக்களின் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் என்ன வென்று சிந்தித்தித்தால்..

சிங்கள பொது மக்களுக்கு இருப்பது மரண பயம்.. அது தான் உண்மை..பிரபாகரனும் , பைத்தியக்கார சஹ்ரானும் அந்த மரண பயத்தை தான் உருவாக்கினர். 

அந்த மரண பயம் தான் இனவாதத்தின் முதலீடு.. 

இலங்கையில் வரலாற்று நெடுகில் வெடித்த குண்டுகள் உயிர்களுடன் சேர்த்து இனங்களுக்கிடையிலான நம்பிக்கையை தகர்த்து விட்டன.ஆனால் அதனை உடையாமல் இத்தகைய ரிஸ்வான்கள் பாதுகாத்து வருகின்றனர். இலங்கையர்களாக ஒற்றுமையாக இந்த நாட்டை கட்டி எழுப்பலாம் என்பதற்கு நம்பிக்கை ஊட்டும் அத்திவாரம் இடுபவர்கள் இவர்கள்..

அல்லாஹ் அந்த இளைஞனுக்கு உயர்ந்த சுவனத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறோம்..கீழே ஒரு சிங்கள சகோதரரின் பதிவு..


No comments

Powered by Blogger.