கொரோனா உள்ளானவர் 237 ஆக அதிகரித்துள்ளது, 63 பேர் பூரண குணம்
இலங்கையில் இறுதியாக இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேரும் கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 63 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment