புத்தளத்தில் ஒருவருக்கு கொரோனா - பிரதேசத்திற்கு செல்லத் தடை
புத்தளம் சாலீஹீன் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த ஒருவர் நேற்று -27- கொரோனா நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு நேற்று குருனாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டதினை தொடர்ந்து,
இன்று -28- அவருக்கு கொரோனா நோய் இருப்பதாக உருதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்கு உறிய இடத்திற்கு அனுப்பப் பட்டிருக்கும் அதேவேளை அவருடன் அந்த பிரதேசத்திலே நெருங்கி பலகியவர்கள், அவரோடு உணவருந்தியவர்கள் என அவரோடு நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை உடனடியாக சிகிச்சைகளுக்காக தற்போது அந்த பிரதேசத்திற்கு வரும் சுகாதார பரிசோதகர்களை நாடி சிகிச்சைக்ளை மேற்கொள்ளுமாரு கேட்டுக்கொள்ளப்படுகின்ற அதேவேளை,
ஏனையவர்கள் அந்த பிரதேசத்திற்குள் நுழைவதும், அந்த பிரதேசத்தினை பார்வையிட வேறு நபர்கள் செல்வது, என அத்தனையும் முற்று முலுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ஏனையவர்கள் எங்கும் வெளியில் செல்லாது, தங்களது வீடுகளிளேயே இருக்குமாரும் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்..!
புத்தளம் நகர பிதா
கே.ஏ பாயிஸ்.
Post a Comment