Header Ads



அபாபீல்கள் மட்டுமல்ல, அற்பகிருமி கொண்டும் ஆட்டிவைப்பான் அல்லாஹ்


- கம்மல்துறை எம்மெல் . ஷரான் -

எத்தனை எத்தனை
பிரமாண்டங்கள் !

ஆயிரம் பேர் பறக்கும்
சொகுசு விமானம் -
ஆழ்கடல் ஆழம் பார்க்கும்
நீர்மூழ்கி -
பல்லாயிரம் வீடுகளை
அடுக்கி வைத்தாற்போல்
உல்லாசக் கப்பல்கள் -
பிரிஜ் கலீபா
மேகம் முட்டி நிற்க-
தாஜ் மஹால்
தாரத்துக்காய் கட்டி வைத்த -
மச்சு பிச்சு-
கொலோசியம் -
குளோனிங் -
தூரம் சுடும் துப்பாக்கி -
ஊரைத் தாண்டும் பீரங்கி -
மலை துளைக்கும் ராக்கெட்டு -
குண்டு துளைக்கா ஜாக்கெட்டு -
ஈபில் டவர் -
சீனச் சுவர் -
அடடா .....
உலகில் தான் எத்தனை
பிரமாண்டங்கள் !
உலகமே எத்தனை பிரமாண்டம் !
              o

எத்தனை வல்லரசுகள்...
எந்தப் பெரும் போரையும்
மூன்றே நாளில் முறியடிப்போம்
என _ மார்தட்டும்
எத்தனை வல்லரசுகள் ?

எத்தனை செல்வந்தர்கள்....
எப்பெரும் துயர் வந்தாலும்
பணத்தை வீசி தூசியாய்
துடைப்போம் - என
பீத்திக் கொள்ளும்
எத்தனை செல்வந்தர்கள் ?

எத்தனை விஞ்ஞானம்....
செவ்வாயில் குடி யமர்த்த -
சந்திரனை இடம் பெயர்க்க -
எத்தனை விஞ்ஞானம் ?
             o

நில் , கவனி
அல்லோல கல்லோலப்படும்
அவனி!

வல்லரசுகள் வென்றனவா .....?
ஆயுதங்கள் கொண்றனவா ....?
விஞ்ஞானம் பீதி பெற ...
மருத்துவம் மயக்கமுற ...

மொத்த உலகும்
ஒத்தை ஈயின்
இறக்கையளவு பெறா
என்கிறான் இறைவன்
அப்புறம்
பிரமாண்டங்கள் எங்கனம் ?
          o

பதுக்கி வைத்த செல்வம்
பூஞ்சனம் பிடித்திருக்கும்
தானம் செய்யத் தோனுமே
இப்போது !
செய்
மனிதா - -
நீ கோமாளி என்பது
ஏலவே தெறியும்
படைத்த றப்புக்கு!
             o
மாபெரும் ரோமின்
ஜனாதிபதி அழுகிறான் -
அல்லாஹ்வின் " அதாபை"
அமெரிக்கா தடுக்குமா என்ன ..??

அபாபீல்கள் மட்டுமல்ல
அற்ப கிருமி கொண்டும்
ஆட்டி வைப்பான்
அல்லாஹ் !

அப்படியிருக்க -
அவனது தடல் புடலான
ஏற்பாடு
எப்படி இருக்கும் ???
சிந்தி -
கொஞ்சம் கண்ணீர் சிந்தி !

வீடும் , தெருவும் 
ஊரும் , நாடும், உலகும்
நிலைகெட்டுத் தடுமாறும்
நிர்க்கதிக்கு காரணம் ... -
கொரோனாவுக்கு
வேண்டுமா நிவாரணம் ..??

நின்றபடி தொழு
கண்டபடி அழு
சாமத்தில் எழு
ஸஜதாவில் விழு

சவர்க்காரமிட்டு
கை கழுவிச்சரிவரா !
செய்த பாவங்கள்
கண்ணீரில் கழுவு !
    ooooooo

2 comments:

  1. Ellam sari endu eduthaalum .neegal kadaisiyil makkalai thawara valikkatalukku iluthusendruveergal endru thonigurathu. Ippadiyum eluthi irukkalaaam....

    Adikkadi kaiyai kaluwuwadu pola. Allawudian adikkadi kettu seidha paavagalilil irundu meela oru vaaiypu endu ninaithu kol.

    ReplyDelete

Powered by Blogger.