Header Ads



கொரோனா குறித்த தகவலை, தாமதமாக வெளியிட்டதா சீனா?


சீனாவில் கொரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது தற்போது விவாதப்பொருள் ஆகி உள்ளது.

சீனா திட்டமிட்டு இவ்வாறு செய்ததால் என பல நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன. சீனாவின் அரசியலும், ஆட்சி அதிகாரமும்தான் இதற்கு காரணம். மொத்த அதிகாரமும் அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் குவிந்துள்ளது. அவர் சொல்வதுதான் அங்கு சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் பேச முடியாத சூழ்நிலை. இதுதான் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் போனதற்கு காரணம். உலகம் மொத்தமும் மொத்தமாக நடுங்குவதற்கும் இதுதான் காரணம். இந்தியாபோல ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடும். சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சிபோலவே செயல்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் சீனா-அமெரிக்கா இரு நாடுகளும் தங்கள் ஏற்றுமதி பொருட்களுக்கு மாற்றி மாற்றி வரி விதித்துக்கொண்டன. அமெரிக்காவின் பலத்த எதிர்ப்புக்குரிய நாடாக சீனா விளங்கியது. ஆனால் இந்தியா மீது சீன அதிபர் ஜி ஜிங் பிங்குக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அதிக கருத்து வேறுபாடுகள் இல்லை. இரு நாடுகளுமே இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ளன. கிட்டத்தட்ட 6000 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்கா சமீபத்தில் ஈரான் புரட்சிகர ராணுவத் தளபதி குவஸம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரானுடன் கடும் பகையில் ஈடுபட்டது. ஈரான் - அமெரிக்கா சண்டையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளது என கூறப்பட்டது. ஆயுத பலத்தில் அமெரிக்காவுக்கு சீனா சற்றும் சளைத்த நாடு இல்லை என்றாலும் சீனா வைரஸ் பரப்பி பயோ வார் மூலம் உலக நாடுகளின் வர்த்தகத்தை பாதிக்கிறது என வாட்ஸாப் செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் இந்த ஊகங்களின் நம்பகத் தன்மை கேள்விக்குறிதான். சீனாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களது எண்ணிக்கை 81,500. அமெரிக்காவில் ஓரிகன், கலிப்போர்னியா மாகாணங்களில் பாதிப்பு எண்ணிக்கை மணிக்கொருமுறை அதிகரித்து 1 லட்சத்தை தொட்டுவிட்டது. இறப்பு எண்ணிக்கை 1000த்தை தாண்டியதால் தற்போது உலக நாடுகளுக்கு சீனா மீது பலத்த சந்தேகம் கிளம்பி உள்ளது. இந்த சந்தேகம் உறுதிபடுத்தப்படவில்லை என்றாலும் கூட சீனா அமெரிக்காவுனான உயிரியல் போருக்காக தன் குடிமக்கள் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சீனாவில் 70 சதவீதம் சீனர்கள் கொரோனாவில் இருந்து தப்பு குணமடைந்ததாக அதிபர் ஜி ஜிங் பிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சோதனை, தடுப்பு மருந்து இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. ஆனால் சீனா மருந்து கண்டுபிடித்து அதனை வெளி உலகுக்கு தெரியப்படுத்தாமல் உள்ளதா எனவும் கேள்வு எழுகிறது. இந்த ஊகங்கள் தற்போது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலா வருகிறது. எது எப்படியோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் முழு வீச்சில் செயல்படுவது ஆறுதலான விஷயம்.

No comments

Powered by Blogger.