Header Ads



சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால், அந்த கட்சியின் கதி அந்தோ பரிதாபமாகி விடும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்றாக குறைந்து போகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் அந்த கட்சியின் கதி அந்தோ பரிதாபமாகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

1 comment:

  1. அரசியல் சாணக்கியம் பேச முன்பு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் களவாடிய கோடான கோடி ரூபா பணத்தை அரச திறைசேரிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டு அரசியல் பேசவாரும், கள்ளன் அவர்களே!

    ReplyDelete

Powered by Blogger.