Header Ads



சஜித் பிரேமதாச பொதுத்தேர்தலிலும் படுதோல்வியடைவார்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஐக்கிய தேசிய கட்சி  ஒரு சவால் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய கட்சியின் தலைர் ரணில் விக்ரமசிங்க இருந்த நிலைப்பாட்டிலேயே அவர் இன்றும் உள்ளார். எனவே சஜித் பிரேமதாச பொதுத்தேர்தலிலும் படுதோல்வியடைவார் என பாராளுமன்ற உறுப்பினர் பியல்  நிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று 18 செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தோன்றவுள்ள பொது கூட்டணியின் சின்னம் குறித்து எதிர்  தரப்பில் இன்று பாரிய நெருக்கடிஏற்பட்டுள்ளன.   

ஒரு  தரப்பினர் யானை சின்னத்தையும், பிறிதொரு தரப்பினர்   அன்னம் சின்னத்தையும்,மூன்றாவத தரப்பினர் இதயம் சின்னத்தையும் உரிமை கோருகின்றார்கள்.

பொதுஜன பெரமுன  தலைமையிலான கூட்டணியின் பதவிகள்  தற்போது சிறந்த பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்து. கூட்டணியின் ஊடாகவே பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.