Header Ads



ஓமானிலிருந்து 5 கோடி ரூபா சிகரட்டுக்களை கடத்திய நால்வர் கைது

(எம்.மனோசித்ரா)

ஓமானிலிருந்து 5 கோடிக்கும் அதிக பெருமதியுடைய வெளிநாட்டு சிகரட்டுக்களை கடத்திய 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓமானிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த  WY 0381 விமானத்தினூடாகவே இவ்வாறு வெளிநாட்டு சிகரட்டுக்கள் கடத்தப்பட்டதாக சுங்க திணைக்களம் தெரிவித்தது. 

குறித்த நான்கு சந்தேகநபர்களிடமும் இருந்து 450 பக்கட்டுக்களில் பொதியிடப்பட்டிருந்த 90, 000 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெருமதி 5 கோடியே 24 இலட்சத்து 7 ஆயிரத்து 800 ரூபா என்று சுங்க திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

சிகரட் கடத்தல் தொடர்பில் 43, 38 மற்றும் 24 வயதுடைய குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், 24 வயதுடைய கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆனொருவரும் கைது செய்யப்பட்டனர். 

குறித்த சந்தேகநபர்கள் நால்வரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒரு பெண் ஏற்கனவே இவ்வாறு சிகரட் கடத்தலுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளவர் என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த பெண்னுக்கு 60, 000 ரூபாய் அபராதமும், ஏனைய இரு பெண்களுக்கும் தலா 20, 000 ரூபா அபராதமும், கைது செய்யப்பட்ட ஆணுக்கு 50, 000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.