பள்ளிவாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்
கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்தெனிய உடுகும்புறவில் அமைந்துள்ள நூர்ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இரவோடிரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் வரக்காபொல நீதிவான் நீதிமன்றத்தில் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதில்லையெனவும் பள்ளிவாசல்வளாகத்துக்கும் புத்தர்சிலைக்குமிடையில் மதில் ஒன்றினை அமைத்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் இணக்கம் தெரிவித்தனர். முஸ்லிம்கள் தாம் நீண்டகாலம் பெரும்பான்மை இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ்வதாகவும் இவ்விவகாரத்தினால் பிரச்சினைகள் உருவாகுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.
அதற்கிணங்க புத்தர் சிலை அவ்விடத்திலிருந்தும் அகற்றப்படமாட்டாது. புத்தர் சிலைக்கும் பள்ளிவாசல் வளாகத்துக்குமிடையில் மதில் ஒன்று நிர்மாணிக்கப்படும் என வரக்காபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம், நூர்ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உட்பட நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட முஸ்லிம்கள், மாற்றுத் தரப்பின் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த தலைமை பெளத்த குரு உட்பட பெரும்பான்மைச் சமூகத்தினர் வரக்காபொல நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
நீதிமன்றில் இரு தரப்பினரும் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதெனவும், புத்தர் சிலையை அகற்றுவதில்லை எனவும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். முஸ்லிம்கள் பொறுமை காத்து இணக்கப்பாட்டுக்கு வந்து பெரும்பான்மைச் சமூகத்தின் உணர்வுகளுக்கு இடமளித்தமைக்கு வரக்காபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நன்றிகளைத் தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இடம்பெற்றது. புத்தர் சிலை வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை நிலவியது. வரக்காபொல மற்றும் கேகாலை பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமைகளை முன்னெடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்தி பிரச்சினையை சுமுகமாக தீரப்பதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றிக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்தே வரக்காபொல பொலிஸார் இவ்விவகாரத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்தனர்.
வரக்காபொல நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் 8 ஆம் திகதி இரு தரப்பினரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீதிவான் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.-Vidivelli
இதுல சுமூகம் எங்கிருந்து வந்தது... சிங்கள அடக்குமுறையும் முஸ்லிம்களின் கோழைத்தனமும்தான் இருக்கிறது...
ReplyDeleteமுஸ்லிம்களின் இந்த இணக்கப்பாடும் பெளத்தர்களின் அமைதியும் இன்றைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இதே பெளத்தர்கள் தங்களின் கோவில் வளாகத்திலேயே முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டியிருக்கிறார்கள் என்று பிரச்சினையை உண்டு பண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
ReplyDeleteஉண்மையிலேயே புத்தர் சிலை பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளேதான் வைக்கப்பட்டிருக்குமேயானால் அது சட்டத்தின் மூலம் உடனடியாக அகற்றப்படுவதே சாலச் சிறந்தது.
அதே நேரம் இனவாத பெளத்தர்கள் இதையே முன்னுதாரணமாக காட்டி இன்னும் பல பள்ளிவாசல்களுக்குப் பக்கத்தில் இவ்வாறான விடயங்களை முன்னெடுப்பார்கள் என்பதையும் இந்த முஸ்லீம் சமூகம் உணர முன் வர வேண்டும்.
முஸ்லீம் சமூகத்தின் அரசியல் வாதிகள், Lawyer Mr. Ali Sabri போன்ற முக்கியமானவர்கள் இவ்விடயத்தில் மெளனம் காப்பது பெரும் கவலையளிக்கிறது.
They may take this decision as example and law to put up Buddah statues in other Muslim areas. Time will answer
ReplyDeletewhat a good idea!
ReplyDeleteSoon, whole land will become a Budist Temple
next punidha poomi eanru solli palli 100 m ulla iruka poda eanpanukal adhaum sumuhama accept panra nilail than irukam.
ReplyDeleteஇப்படியே எல்லா பள்ளிகளுக்கும் முன்னால் புத்தர்சிலை முளைக்கும் ஏனெனில் இந்தப் பள்ளியில் முளைத்தது ஏனைய பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அமையும்.
ReplyDeleteசமாதானம் ஐக்கியம் என்ற போலி போர்வையில் கோழைகளின் எடுக்கப்பட்ட முடிவே இது அதாவது சிலையை அப்புறம் படுத்துவதில்லை, மதில் கட்டுவது என்பது.
இறைவன் நாடினால் அவ்விடத்தில் வைக்கப்பட்ட சிலையை தரிசனம் தேடிவரும் சிலை வணங்கிகளுக்கு பக்கத்தில் உள்ள பள்ளியின் நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்திற்கு மதம் மாறவும் வாய்ப்புகள் அமையலாம்.
இப்படி பள்ளிகளுக்கு அருகில் கோயில்கட்டத்தானோ அன்றுஅஜானைப்போல் பாரதியாரும் இப்படி பாட்டெழுதி ஆசைப்பட்டார்.
ReplyDelete"பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்"